மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கும் சந்தேகிக்கும் தாய்

ஜோகூர், மார்ச் 18 –

ஜோகூர், பாசிர் கூடாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 18 மாதக் ஆண் குழந்தையை, மனிதாபிமானமின்றி அக்குழந்தையின் தாயார் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறப்படும் சம்பம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட அப்பெண் இன்னும் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டுள்ள 32 வயதுடைய அப்பெண்ணை உடல்நல பரிசோதனைக்காக பெர்மாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் மொகமாட் சொஹாய்மி இஷாக் இன்று கூறினார்.

அக்குழந்தையின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட வெட்டுக் காயம்தான் காரணம் என்று முன்பாக மொகாமாட் சொஹாய்மி உறுதிப்படுத்தியிருந்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அப்பெண் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்