மாமன்னரின் முடிவை அம்னோ மதிக்கிறது

முன்னாள் பிரதமரும், அம்னோ முன்னாள் தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் சிறைத் தண்டனை காலத்தை 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் நாட்டின் 16 ஆவது மாமன்னர் சுல்தான் அப்துல்லா எடுத்துள்ள முடிவை அம்னோ மதிப்பதாக இன்று காலையில் நடைபெற்ற அம்னோ உச்சமன்ற சிறப்புக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தி, மதிக்கும் அதேவேளையில் மன்னிப்பு வாரியத்தின் முடிவினால் அம்னோ வருத்தம் கொள்வதாக இன்று மாலையில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அம்னோ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அம்னோவின் முன்னாள் தலைவர் என்ற முறையில் நஜீப்பிற்கு உரிய நீதியைப் பெறுவதற்கான தனது கடப்பாட்டை கட்சி தொடரும் என்று இவ்வேளையில் உறுதி பூண்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்