மித்ரா தொண்டூழிய குழுவினர் உருவாக்கப்படும்

இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ராவின் திட்டங்கள் யாவும் இந்திய சமுதாயத்தின் இலக்குக்கு உரிய மக்களை சென்றடைவது, அவற்றை உறுதி செய்வது மற்றும் கண்காணிப்பது ஆகியவற்றுக்கு ஏதுவாக மித்ரா நிர்வாகத்தின் கீழ் நிறைய குழுக்கள் உருவாக்கப்பட்டு, , அந்த குழுக்களின் கீழ் தொண்டூழியர்களை நியமிப்பது தொடர்பான ஒரு செயல் திட்டத்தை தாம் வகுத்து வருவதாக மித்ரா பணிக்குழு தலைவர் P. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த தொண்டூழியர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இலக்குக்கு உரிய இந்தியர்களுக்கு உதவுவதை பிரதான நோக்கமாக கொண்டு இருப்பார்கள் என்று Batu எம்.பி.யான பிரபாகரன் குறிப்பிட்டார்.

இவ்வாறு நியமிக்கப்படுகின்ற தொண்டூழியர்கள் மக்களின் பிரச்னையை நேரடியாக கண்டறிவார்கள்.
தவிர, மித்ராவின் உதவித் திட்டங்களை எதிர்பார்க்கின்ற மக்கள் , அனைத்து தொடர்புகளையும் மித்ரா நிர்வாகக் குழுவினரிடமே வைத்துக்கொள்ளுமாறு பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்