ஷஆலாம், மார்ச் 19-
கோடை காலத்தில் அதிகரித்துள்ள வெயிலினால் வீடுகளில் மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரையில் மின்சாரக் கட்டணத்தில் சிறப்பு கழிவு வழங்கப்பட வேண்டும் என்று Tenaga nasional Berhad கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று லட்சத்திற்கும் குறைவான மதிப்பைக் கொண்ட வீடுகளுக்கு இந்த கட்டண கழிவை TNB வழங்க வேண்டும் என்று செனட்டர் டத்துக் மொகமாட் ஹிசாமுடின் யாஹாயா இன்று மேலவைக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
மக்களின் சிரமங்களை குறைப்பதற்கு இந்த கோடை காலத்தில் இத்தயை சிறப்புக் கட்டண கழிவு அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.