மின்சார காரில் பயணித்த இளைஞன் விபத்தில் உயிரிழந்தார்

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர், டுத்தா – உளூ கெலாங் நெடுஞ்சாலையின் 6.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் தனது காதலியுடன் சொகுசு மின்சார காரில் பயணித்த பதின்ம வயது இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 2.10 மணியளவில் ஜாலான் டுத்தா – விலிருந்து பிளாசா டோல் ஆயர் பாநாஸ் -சிற்கு சென்றுக் கொண்டிருந்த 19 வயதுடைய இளைஞன் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் சரிபியூடின் மோஹட் சல்லெஹ் தெரிவித்தார்.

அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளனதில் கார் சட்டென்று தீப்பிடித்து எரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இக்கோர விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் அவரின் காதலி இடுப்பு எலும்பு முறிவின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சரிபியூடின் மோஹட் சல்லெஹ் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்