மிரட்டல் குறிப்பை ங்கா கோர் மிங் பெற்றுள்ளார்

மன்ஜோங், மார்ச் 7

அனாமதேய நபரிடமிருந்து மிரட்டல் குறிப்புகளை வீடமைப்பு,ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் பெற்றுள்ளார். .

இஸ்லாத்திற்கு எதிராக சவால் விடாதே என்ற தலைப்பில் அந்த மிரட்டல் குறிப்பு இருந்தது என்றும், இந்த குறிப்பு, இன்று காலை 7.30 மணியளவில் பேரா, மன்ஜோங் , அய்யெர் தாவார் இல் உள்ள ங்கா கோர் மிங் கின் பெற்றோர் வீட்டின் முன்வாசலில் சிறு காகிதங்களினால் எழுதப்பட்டு, சிதறவிட்டு சென்றள்ளதாக புகார் கிடைத்துள்ளது என்று மன்ஜோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமாட் னோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் ங்கா கோர் மிங் மிங்கின் 76 வயது தாயார், இன்று காலை 10.15 மணியளவில் போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்