மீன்பிடி படகு கவிழ்ந்தது

ஈப்போ, கோல கங்சார், கம்போங் செண்டெரோவில் உள்ள செண்டெரோ அணைக்கட்டில் மீன் பிடிக்கப் படகில் சென்ற அடவர் அப்படகு கவிழ்ந்து இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

வேகமான காற்று வீசியதால் அந்தப் படகு கவிந்திருக்கலாம் எனவும் படகில் 30 வயது மிக்க முகம்மட் கைருல் ருஷ்டானும் அவரது நண்பர் ஒருஅரும் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் பேரா மாநில தீயணைபு – மீட்புப் படையின் துணை இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் கூறினார்.

மூழ்கியவரின் நண்பரை அருகில் இருந்த மற்றவர்கள் காப்பாற்றி விட்டதாகவும் தேடுதல் பணி இன்னும் நிறைவடைய வில்லை எனவும் சபாரோட்ஸி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்