பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிரான சட்டவிரோதப் பணமாற்றம் குற்றச்சாட்டு மீதான வழக்கை ஒத்திவைப்பதற்கு பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்திறகு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
இவ்வழக்கு தொடர்பில் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு தொடர்பான விண்ணப்பம், வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும், அதன் முடிவு தெரியும் வரையில் வழக்கை ஒத்திவைக்குமாறு பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு நீதிபதி Azura Alwi அனுமதி அளித்தார்.