முதலாளியை மாற்றிக்கொள்வதற்கு அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி

அந்நியத் தொழிலாளர்கள் குறிப்பாக, விவசாயம் மற்றும் தோட்டத் தொழில்துறைகளில் வேலை செய்து வருகின்றவர்கள், ஒரு முதலாளியிடமிருந்து இன்னொரு முதலாளியிடம் பணியிடத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அந்நியத் தொழிலாளர்கள் நிர்வாக நடைமுறை தொடர்பாக மனித வள அமைச்சுக்கும், உள்துறை அமைச்சுக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதலாளிகளை மாற்றிக்கொள்வதற்கு அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.

மலேசியாவில் வேலை செய்வதற்கு முதலாளிமார்களால் தருவிக்கப்படும் அந்நியத் தொழிலார்களுக்கு வேலை கொடுக்க இயலாத பட்சத்தில் அவர்கள் வேறு முதலாளிகளை மாற்றிக்கொள்வது மூலம் வேலையின்றி பரிதவிக்கும் அவலநிலை தடுக்கப்படும் என்று சைபுடின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்