சிரம்பான், மே 11 –
முதியவர் ஒருவர் தனது வீட்டில் கடும் தீக்காயங்களுடன் இறந்தது கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிரம்பான், கம்போங் ஹுஜுங் பாசிரில் இன்று காலை 11.40 மணியளவில் அந்த முதியவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹட்டா சே தின் தெரிவித்தார்.
சிகரெட் துண்டின் நெருப்பை அணைக்காததால் அந்த முதியவர் உறங்கி கொண்டிருந்த மெத்தையில் தீ பரவியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஏசிபி ஹட்டா குறிப்பிட்டார்.