முன்உறுதி செய்து கொள்ளும் முறை ஆராயப்படுகிறது

தடுப்பூசி மையங்களில் கோவிட் – 19 தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன் சந்திப்பிற்கான தேதியை உறுதி செய்வது தொடர்பான நடைமுறைகளை சுகாதார அமைச்சு தற்போது மிக கவனமாக ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் டுசுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

அதேவேளையில் முன்சந்திப்பின்றி, MySejahtera வில் பட்டியலிடப்பட்டுள்ளதைப் போல தடுப்பூசி மையங்களின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த நடைமுறை, சம்ந்தப்பட்ட மையங்களின் வருகையாளர் நேரம், ஆயத்த நிலைகளில் உள்ள தடுப்பூசிகளைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று டாக்டர் டுசுல்கேப்ளி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்