கோலாலம்பூர், ஏப்ரல் 11 –
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் மூன்றாம் வகுப்பு வார்டுகளுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் துரிதப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார்.
மூன்றாம் வகுப்பு வார்டுகளில் மேம்படுத்தக்கூடிய வசதிகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் டாக்டர் டசுல்கில்பி அஹ்மாட் விரிவாக ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் மூன்றாம் வகுப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்களை இன்று தனது துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரோஹானா ஜோஹான்னுடன் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.