கோலாலம்பூர், ஏப்ரல் 11 –
கோலாலம்பூர் லெபுராயா டூத்தா உல்ய் கிள்ளாங் நெடுஞ்சாலையான டூக்கில், தாமான் செதியாவாங்சா அருகில் இன்று அதிகாலை 2 மணியளவில் கார் ஒன்று சாலைத் தடுப்பை மோதி தடம் புரண்டு, தீப்பற்றிக்கொண்டதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.அவரின் பெண் தோழி கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
இவ்விபத்தில் BMW 17 ரக கார், 100 விழுக்காடு முற்றாக தீயில் அழிந்ததாக தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் கடும் காயங்களுக்கு ஆளான அவரின் பெண் தோழி மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கார் தீப்பற்றிக்கொண்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.