மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

நாடாளுமன்ற மேலவைத் தலைவராக பதவியை வகித்து வரும் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், அப்பதவியை ராஜினாமா செய்வதற்கு கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியான வான் ஜுனைடி, சரவா மாநிலத்தின் எட்டாவது ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் வான் ஜுனைடி, மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு கடிதம் சமர்ப்பித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சரவா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வரும் நோய்வாய்ப்பட்டுள்ள துன் தைப் மஹ்மூத்- டிற்கு பதிலாக வான் ஜுனாயிடி, சரவா மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்