EWRFஇன் புதையல் தேடும் போட்டி !

EWRF எனப்படும் கல்வி சமூக நல ஆய்வு அறவாரியம் எற்பாட்டில் நன்கொடை திரட்டும் வகையில் புதையல் தேடும் போட்டி – CHARITY TREASURE HUNT நடைபெற இருக்கிறது என அவ்வமஈப்பின் தலைவர் கோவிந்தசாமி தெரிவித்தார்.

குழு நிலையிலான இப்போட்டியில் ஒரு குழுவின் நால்வர் பங்கேற்கலாம் எனவும் பதிவு செய்யும் குழுக்களுக்கு ஆயிரம் வெள்ளி கட்டணம் விதிக்கப்பட உள்ளது எனவும் கோவிந்தசாமி குறிப்பிட்டார்.

EWRFஇன் ஆண்டுத் திட்டமான சிறார்களுக்கான E4J ஆங்கில மொழிப் பயிற்சி, பதின்ம வயதினருக்கான CSI திட்டங்களுக்கு போதுமான நிதி திரட்டி இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு உதவ இந்தப் போட்டி நடத்தப்படுவதாக கோவிந்தசாமி குறிப்பிட்டார்.

இவ்வமைப்பின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களிலும் இளையப் பக்கத்திலும் பதிவுக்கான பாரம் மட்டும் இன்றி நன்கொடை திரட்டுவதற்கான பாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்