கடந்த வாரம் பேரா, Bidor குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடிய 131 பேரில், மேலும் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி மரணமுற்றார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் Datuk Seri Mohd Yusri Hassan தெரிவித்துள்ளார்.
இந்த மரணமானது, தடுப்பு கைதிகள் விபத்தில் சிக்கிய இரண்டாவது சம்பவமாகும். நேற்று இரவு 9.20 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 332.5 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு கைதி மாண்டதாக அவர் குறிப்பிட்டார். கள்ளக்குடியேறிகளை உள்ளடக்கிய அந்த தடுப்பு முகாமிலிருந்து தப்பி ஓடிய 131 கைதிகளில் இதுவரை 54 பேர் பிடிப்பட்டுள்ளனர் என்று Mohd Yusri Hassan விளக்கினார்.