கோலாலம்பூர், ஏப்ரல் 03-
பினாங்கு, கம்போங் பாருவில் உள்ள வங்கியில் பணிப்புரியும் உதவி மேலாளரான சித்தி, 57 வயதுடைய வாடிக்கையாளர் ஒருவர் தொலைப்பேசி மோசடியில் 150,000 வெள்ளியை இழக்காமல் இருப்பதிலிருந்து காப்பாற்றினார்.
அரசு ஊழியரான பாத்திமாஹ் -வை பண மோசடியில் சிக்காமல் தவிர்ப்பதற்கு சித்தி குறிப்பிடப்பட்ட வங்கியில் வழக்கு அறிக்கை ஒன்று தாக்கல் செய்ய உதவியதுடன் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கை முடக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு வங்கியிலிருந்து தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அங்கீகரிக்கப்படாத பண பரிவர்த்தனைகளில் அந்நபர் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்ததாகவும் அதிலிருந்து விடுப்படுவதற்கு போதுமான தொகையை வங்கியில் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
இதுக்குறித்து அந்நபருக்கு சித்தி உதவி புரிய முற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் பண மோசடியில் சிக்காமல் காப்பாற்றியதாகவும் அந்த வங்கியிலிருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.