ரமடான் பசாரில் இரு வியாபாரிகளுக்கும் இடையே சண்டை

கோலாலம்பூர், மார்ச் 28-

ரமடான் பசாரில் ஏற்பட்ட தவறான புரிதலைத் தொடர்ந்து இரு வியாபாரிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று பெட்டாலிங் ஜெயா, தாமான் மெடான் ரமடான் பஜார் -ரில் போபியாஹ் பலகார விற்பனையாளருக்கும் தர்பூசணி குளிர்பான வியாபாரிக்கும் வாக்குவாதம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

அந்த குளிர்பான வியாபாரி, பலகார விற்பனையாளரின் தளத்தில் நுழைந்ததற்காக அதில் அதிருப்தியடைந்த அந்த நபர் சண்டையில் ஈடுபட்டு ஒரு உலோக கம்பியை கொண்டு அவரை தாக்கியதாக பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் ஏசிபி ஷாஹ்ருல்நிசம் ஜாபார்@இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 20க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆண்கள் உட்பட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக ஷாஹ்ருல்நிசம் ஜாபார் அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் நாளை வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்