1,851 விபத்துக்கள் பதிவாகியுள்ளன

கோலாலம்பூர், மார்ச் 28-

நாடு முழுவதும் நேற்று பதிவாகியுள்ள சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,851 ஆக குறைந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,859 ஆக இருந்த வேளையில் நேற்று 8 விபத்துக்கள் குறைந்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்தோ மோஹட் அஸ்மன் அஹ்மத் சபரி தெரிவித்தார்.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே பதிவாகியிருந்த போதிலும், சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு கண்டிருப்பதாக மோஹட் அஸ்மன் கூறினார்.

சாலையை பயன்படுத்துவோர் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வாகனத்தை செலுத்திட வேண்டும் என்று மோஹட் அஸ்மன் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்