2023 ஆம் ஆண்டில் 1504 சட்டவிரோத சூதாட்டங்கள் முறியடிக்கப்பட்டன !

அலோஸ்டார், ஜன – 7

2023 ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தில் ஆயிரத்து 504 சட்டவிரோத சூதாட்டக் குற்றச்செயல்கள் முறியடிக்கப்பட்டிருப்பத்தாக கெடா மாநில காவல்துறை தலைவர் டத்தோ பிசோல் பின் சாலே குறிப்பிட்டார் .

அக்குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட ஆயிரத்து 661 பேர்களையும்  கைது செய்திருப்பத்தோடு 3 லட்சத்து 11 ஆயிரத்து 142 வெள்ளி ரொக்கத்தையும் கைப்பற்றிருப்பத்தாக பத்திரிகையாளர்களிடம் அவர் கூறினார் .

மேலும் , கடந்த வருடத்தில் நடத்திய 3 சோதனைகளில் ‘Calling Centre ‘ சூதாட்டத்தில் 10 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .

அத்துடன் கட்டடங்களுக்குள் சட்டவிரோதமாக நடத்திய சூதாட்டத்தில் 138 பேர்கள் கைது செய்யப்பட்டனர் . சட்டவிரோதமாக சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 298 கடைப்பகுதிகளில் மின்சார துண்டிப்பு செய்யப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்