கோப்பேங், மார்ச் 7 –
கோழிகளை அடைத்து வைக்கும் மூங்கிள் கூடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லோரி ஒன்று, மற்றொரு லோரியுடன் மோதி, தீப்பிடித்துக்கொண்டதில் அதன் ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 294.8 ஆவது கிலோ மீட்டரில் கோப்பேங் கிற்கும், சிம்பாங் பூலாய் க்கும் இடையில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் லோரி ஓட்டுநரான யுவ் கியாங் கூன் மற்றும் உதவியாளர் அப்துல் ரஹ்மான் மாட் டெசா ஆகிய இருவரும் சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.
இரண்டு லோரிகளும் வடக்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக க்ம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் மொகமாட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார்.