வரும் புதன்கிழமை விவாதிக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13-

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மானிய ஒதுக்கீடு தொடர்பாக ஒற்றுமை அரசாங்கத்தின் செயலக உயர்மட்டத் தலைவர்கள் வரும் புதன்கிழமை விவாதிக்கவிருக்கின்றனர் என்று துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடில்லாஹ் யூசோப் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பில் பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்ஜாஹ் சைனுதீன், எதிர்க்கட்சி கொறடா தக்கியூட்டின் ஹாசன், பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவர் ரொனால்ட் கியாண்டீ ஆகியோருடன் கடந்த மார்ச் 19 ஆம் தேதி நடத்தப்பட்ட சந்திப்பின் தொடர்ச்சியாக, ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகம் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மானியம் ஒதுக்கீடு செய்வது குறித்து விவாதிக்கவிருப்பதாக பாடில்லாஹ் யூசோப் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்