விஜயகாந்த் மகனுக்கு தந்த வாக்குறுதி.. நிறைவேற்றிய லாரன்ஸ்.

இந்தியா, மார்ச் 27-

மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ்.

விஜயகாந்த் மறைந்த போது, அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு அனைத்துவித உதவிகளும் சினிமாவில் செய்துத்தர தயாராக இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் அவர் நடிக்கக்கூடும் என்றனர்.
‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ படங்களில் நடித்த சண்முக பாண்டியன் அடுத்து ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்தார்.

அன்பு இயக்க, இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒருவருடம் படம் குறித்து எந்ததத் தகவலும் இல்லாதிருந்த நிலையில், தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது. படை தலைவனில் ராகவா லாரன்ஸ் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்