பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 11-
கிளாந்தான், கோலா கிராயில் நோன்பு பெருநாளை கொண்டாடிவிட்டு, சுங்கை புலோஹ்-விலுள்ள தமது வீட்டை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த இரு பாதுகாவலர்கள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று மாலை மணி 5.30 அளவில், கோலா லிப்பிஸ்-சை நோக்கி செல்லும் லிங்காரான் தெங்காஹ் உத்தாமா நெடுஞ்சாலையின் 57ஆவது கிலோமீட்டரில் அந்த விபத்து நிகழ்ந்தது.
இவ்விபத்தில் 44 வயது மாசுவான் மாட் சின் மற்றும் அவரது நண்பருமான 46 வயது கிஸ்னாவிதா சாட் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அவ்விருவரும் பயணித்திருந்த ஹோண்டா RS-X ரக மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதால், அந்த விபத்து நேர்ந்ததாக, லிப்பிஸ் போலீஸ் தலைவர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.