விபத்துக்குறித்த சாட்சியங்களை போலீசார் தேடி வருகின்றனர்

Rawang, Jalan Batu 18 – யில் ஏற்பட்ட கோர விபத்தை குறித்த சாட்சியங்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வரும்படி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று நள்ளிரவு 2:45 மணியளவில் ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 39 வயதுடைய ஆடவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோம்பாக் போலீஸ் தலைவர் Abang Kaderi Abang Wasli தெரிவித்தார்.

Rawang – கிலிருந்து Selayang – கிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த அவ்வாடவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வண்டியிலிருந்து தூக்கி எரியப்பட்டதாக Abang Kaderi கூறினார்.

சவப் பரிசோதனைக்காக அவ்வாடவரின் உடல் Selayang மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இச்சம்பவம் குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால் விசாரணைக்கு உதவ முன்வருமாறு Abang Kaderi பொதுமக்களை வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்