டுங்குன், ஏப்ரல் 09-
டுங்குன், கெத்தெங்காஹ் ஜெயா-வில் விவாகரத்து கேட்டதற்காக தனது மனைவியை, தொழிலாளி ஒருவர் அரிவாளால் கொடூரமாக வெட்டி காயப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் உள்ளூர்வாசியான 64 வயதுடைய கணவருக்கும் 39 வயதுடைய மனைவிற்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக தகராறு ஏற்பட்டதாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் மைஸுரா அப்துல் காதிர் கூறினார்.
அச்சண்டையில் அந்நபர் விவாகரத்து கேட்ட தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி தலையை வெட்டியதாக மைஸுரா அப்துல் இன்று தெளிவுப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் மேல் சிகிச்சைக்காக சுல்தானாஹ் நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டப்பட்ட அந்நபர் கைது செய்யப்பட்டு, குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Maizura Abdul மேலும் அறிவித்தார்.