மாட்ரிட், மார்ச் 30-
ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபனிட கதேதோங்கை சந்தித்தார்.
முதல் செட்டை 26-24 என போராடி கைப்பற்றிய பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 17-21, 20-22 என இழந்து, காலிறுதியில் தோல்வி அடைந்தார்.