கெடா மாநிலத்தில் முதல் Smart City இலக்கு திட்டத்தில் கூலிம் மாவட்டத்தின் Smart வாகனம் நிறுத்தும் சேவையின் மூலம் கடந்த இரண்டு வருடத்தில் 15 லட்சம் வெள்ளி லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக கூலிம் நகராண்மைக் கழகத்தின் தலைவர் Dato Haji Elmi Yusoff தெரிவித்துள்ளார்.
கூலிம் மாவட்டத்தை இன்னும் பல கோணங்களில் விவேக நகராக உருமாற்றம் செய்வதற்காக Hi- Tech Padu ( ஹய்தேக் பாடு ) நிறுவனத்துடன் கூலிம் நகராண்மை கழகம் கருத்திணக்க ஒப்பந்தத்தை கொண்டுள்ளதாக Elmi Yusoff குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம், 7 விதமான கூறுகளை உள்ளடக்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கூலிம் நகரின் பொருளியல் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் , உள்கட்டமைப்பு ஆகியவை இவற்றில் அடங்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
2021 ஆம் ஆண்டில் தொடங்கிய Smart வாகனம் நிறுத்தும் திட்டத்தை கூலிம் மாவட்டத்தில் இதுவரை 83 ஆயிரம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இன்று Kulim Inn தங்கும் விடுதியில் நடைபெற்ற கூலிம் நகராண்மைக் கழகம் மற்றும் Hi- Tech Padu பாடு நிறுவனத்துடனான கருத்திணக்க ஒப்பந்த நிகழ்வில் Elmi Yusoff மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஒப்பந்த நிகழ்வில் கெடா மாநில அரசின் சீனர் , இந்தியர் , சயாமியர் மற்றும் அரசு சார்ப்பற்ற இயக்கங்கள் மீதான ஆட்சி குழு உறுப்பினர் Wong Chia Zhen, Hi- Tech Padu நிறுவனத்தின் தலைமை அதிகாரி Salmi Nadia Mohd Ismail மற்றும் கூலிம் மாவட்ட அதிகாரி Haji Mohd Jan Haji Ramli ஆகியோர் கலந்து கொண்டனர்.