ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கியது, நால்வர் உயிர் தப்பினர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 5 –

மலேசிய கடல்சார் போலீசாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலையில் கோலசிலாங்கூரில் பூலாவ் அங்சா கடப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த விபத்து தொடர்பில் காலை 10 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்துக் ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

அந்த ஹெலிகாப்படர் கடலில் விழுந்த போது, அதில் பயணித்த நால்வர், மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று டத்துக் ஹுசேன் ஓமார் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தை மலேசிய வான்போக்குவரத்து துறையும் உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்