1.15 மில்லியன் வெள்ளி மதுபானம் பறிமுதல்

சிலாங்கூர், ஏப்ரல் 4 –

அரச மலேசிய சுங்கத்துறை கடந்த மார் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரையில் சிலாங்கூர், ஆலோக்கோங் கோலாலம்பூர் செராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் 11 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள மதுபானம் வகைகள் மற்றும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளது.

இரண்டு வெவ்வேறு சோதனைகளில் ஒரு கொந்தெனாவிற்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபான வகைகளையும், சிகரெட் பெட்டிகளையும் பறிமுதல் செய்ததாக அரச மலேசிய சுங்கத்துறையின் உதவி தலைமை இயக்குநர் நோரெலா இஸ்மாயில் இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த மதுபான வகைகளும், சிகரெட்டுகளும் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டவையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்