23 லட்சம் வாகனங்கள் பகாங்கிற்குள் நுழையும்

குவாந்தான், ஏப்ரல் 4 –

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு கிழக்குகரையோர நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி பகாங் மாநிலத்திற்குள் சுமார் 23 லட்சம் வாகனங்கள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் பகாங் மாநிலத்திற்குள் நுழைந்த வாகனங்களின் எண்ணிக்கைகையைவிட இம்முறை கூடுதலாக மூன்று லட்சம் வாகனங்கள் நுழையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராசாலி காசிம் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்