12 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்

செராஸ், மார்ச் 8 –

செராஸ் சில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 12 ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.

நேற்று மதியம் 1:52 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சுப்ரின்டென்டன் ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.

அவ்விடத்தில் 12 வயதிற்கு உட்பட்ட உள்ளூர் சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே உள்ள புல்வெளியில் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை கண்டறிந்ததாக ரிட்சுவான் காலிட் கூறினார்.

பிறகு அந்த சிறுவன் உயிரிழந்ததை கென்சேலர் துவாங்கு முக்ரிஸ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ததாக ரிட்சுவான் காலிட் நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

இது திடீர் மரணமே என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்