17 வயது மாணவனிடம் பகடிவதை புரிந்த கும்பல்

ஜொகூர் பாரு, ஏப்ரல் 02 –

ஜொகூர் பாரு, தாமான் புத்தெறி வங்சா-வில் உள்ள காற்பந்து மைதானத்தில் 17 வயதுடைய மாணவனை ஒரு கும்பல் பகடிவதை செய்ததாக காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.

கடந்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் கிடைக்க பெற்றதாக ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

அம்மாணவனை சந்தேகிக்கும் அந்நபர்கள் கிண்டல் செய்தது மட்டுமின்றி அறைந்து தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ரவூப் செலாமாட் கூறினார்.

அதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்ட அம்மாணவனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக ரவூப் செலாமாட் மேலும் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்