தும்பாட், ஏப்ரல் 23-
20 க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் ஐந்து மணி நேரத்திற்குள் பெட்ரோல்களை வாங்கி கடத்தல் செய்ய முயற்சித்ததாக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகிக்கும் 30 வயதுடைய அவ்வாடவர் 36 பிளாஸ்டிக் பைகளில் 900 லீட்டர் பெட்ரோலை வாங்கி தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முயற்சித்த வேளையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பாசிர் மாஸ்-சிலிருந்து தும்பாட்- டிற்கு புரோட்டான் வீரா ஏரோபெக் ரக காரில் தப்பிச் செல்ல முயிற்சித்த அந்த ஆடவரை மரின் போலீஸ் படையின் உதவியுடன் கையும் களவுமாக பிடிக்கப்பட்டதாக கிளந்தான், உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினங்கள் அமைச்சகத்தின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.
சோதனையில் 1,845 வெள்ளி மதிப்பிலான 900 லீட்டர் பெட்ரோல்களை அவ்வாடவரிடமிருந்து கைபற்றியதாக இன்று ஓர் அறிக்கையில் அஸ்மான் இஸ்மாயில் மேலும் குறிப்பிட்டார்.