20 வீடுகள் தீயில் சாம்பல்

கூச்சிங், மார்ச் 22.

கூச்சிங், கம்போங் ஹாஜி பாக்கியில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 பேர் கொண்ட நான்கு வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டன.

இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட அத்தீ விபத்தில் 30 சதவீதம் வீடுகள் தீயில் பாதிக்கப்பட்டதுடன் நோன்பு பெருநாள் நெருங்குகின்ற வேளையில் அக்குடியிருப்புவாசிகள் வீடுகளை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து காலை மணி 5:22 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக சரவாக், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

படுங்கான், தபுவான் ஜெயா, பத்து லின்த்தாங் ஆகிய தீயணைப்பு, மீட்புத்துறை நிலையங்களிலிருந்து மொத்தம் 28 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டதாக அவர் விளக்கினார்.

அதே வேளையில், தீ ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்