4 வயது சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது

பூஞ்சோங், ஏப்ரல் 02 –

பூஞ்சோங், செரி கெம்பாங்கான், ஜாலான் KP 4/9 கோத்தா பெர்டானா -வில் உள்ள தாசேக் புத்றா பெர்டானா ஏரியில் 4 வயதுடைய சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் தலைவர் வான் ஷாரிமான் வான் சல்லெஹ் தெரிவித்தார்.

அச்சிறுமியின் உடல் தாசேக் புத்றா பெர்டானா-வின் ஏரியிலிருந்து 100 மீட்டர் ஆழத்திலும் சம்பவ நிகழ்ந்த இடத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைத்தூரத்திலும் கண்டெடுக்கப்பட்டதாக வான் ஷாரிமான் கூறினார்.

நீரின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக அச்சிறுமி கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் மலேசிய காவல் துறை உட்பட 25 மீட்புக்குழு உறுப்பினர்கள் இன்று தேடுதல், மீட்பு பணியில் ஈடுப்பட்டதாக வான் ஷாரிமான் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்