5 வயது சிறுவனின் கழுத்து, நெஞ்சை துளைத்த இரும்பு

கோத்தா மாருடு, மார்ச் 15 –

சபா, கோத்தா மாருடு, கம்பூங் தான்டேக் க்கில் மளிகைக் கடைக்கு தாயுடன் நடந்து சென்ற போது, கீழே தடுமாறி விழுந்த 5 வயது சிறுவனின் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளை இரும்பு கம்பி துழைத்தது.

அதில், அவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார் .

நேற்று மாலை நேரத்தில் நிகழ்ந்த அச்சம்பவத்தைத் தொடர்ந்து, அச்சிறுவன் கோத்தா மாருடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அச்சிறுவனின் உடலிலிருந்து இரும்பை அகற்றுவதில், மருத்துவமனை தரப்பு சிரமத்தை எதிர்நோக்கியதை அடுத்து, தீயணைப்பு மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

6 தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைக் கொண்டு அச்சிறுவனின் உடலிலிருந்து அந்த இரும்புக் கம்பியை வெற்றிகரமாக அகற்றினர்.

பின்னர், மேல் நடவடிக்கைகளுக்காக அச்சிறுவன் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்