7 நாட்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்

கோலாலம்பூர், மார்ச் 20 –

தீபகற்ப மலேசியா உட்பட சபாவில் அதிகமான இடங்களில் 35 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பநிலையுடன் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை ஏழு நாட்களுக்கு நீடிக்கவுள்ளது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தீபகற்ப மேற்கு பகுதியிலும் சரவாக்கிலும் இடியுடன் கூடிய கனத்த மழையும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம் குறித்து மெட்மலேசியாவில் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் கண்டறிவதுடன் இதுக்குறித்து உண்மையான தகவல்களை myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கு பொதுமக்களை மெட்மலேசியா நிறுவனம் நினைவுறுத்துகின்றது.

வெப்பநிலை அதிகமாக இருப்பதால் நீரை அதிகமாக அருந்துவதுடன் எரிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டாம் என்று மெட்மலேசியா வலியுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்