கோலாலம்பூர், ஜன – 5,
கடந்த இரு அரசாங்கங்களின் திட்டங்கள், அடைவு நிலை ஆகியன குறித்த விளம்பரச் செலவுகள் குறித்த விவகாரம் தற்போது மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணையில் உள்ளது.
அது குறித்த ஆவணங்கள் தற்போது 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சிய 20 சதவிகித ஆவணங்கள் நிதியமைச்சிடம் இருந்து பெறப்படும் முயற்சிகள் நடந்து வருவதாக ஆணையத்தின் மூத்த இயக்குநரான டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹாஷிம் தெரிவித்தார்.
விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில், வெகு விரைவில் அந்த ஆவணங்கள் 100 சதவிகிதம் முழுமை செய்யப்படும் என்றார்.