கோலாலம்பூரின் புதிய போலீஸ் தலைவர்

பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், கோலாலம்பூர் புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்படவிருக்கிறார்.

இது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலீஸ் படை ஆணையமான SPPயின் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

முன்னாள் கோலாலம்பூர் போலீஸ் தலைவரான டத்தோ ஆஸ்மி அபு காசிம், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS