ஒப்பந்த மருத்துவர்கள், நாளை நடத்தவிருக்கும் சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் ஈடுபடக்கூடாது என்று சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுன் 30ஆம் தேதி பொதுச் சேவைத்துறைத் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இது போன்ற சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஒப்பந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.