பேறு குறைந்த அந்நிய நாட்டவர்களைப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்த ஆடவர் கைது

பேறு குறைந்த மூன்று அந்நிய நாட்டவர்களைப் பிச்சை எடுக்க வைத்து பணம் ஈட்டிய 49 வயதுடைய உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அலோர்ஸ்டார் மாநகர் மன்றம், ஜாலான் துங்கு இப்ராஹிம் சாலையில், honda city ரக வாகனத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது, பிச்சை எடுக்க வைத்து கட்டாயப்படுத்தியதாக நம்பப்படும் 45 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய, பேறு குறைந்த 3 கம்போடியர்களை போலீசார் மீட்டனர் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹாசான் வான் ஹ​மா​ட் தெரிவித்துள்ளார்.

அம்மூவரும் ஜொகூர், hulu tiram மிலிருந்து Alor setar க்கும் அழைத்து வரப்பட்டு, அங்குள்ள காலை சந்தை மற்றும் ரமலான் சந்தைகளில் பிச்சை எடுக்கும்படி நிர்பந்தம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று வான் ஹாசான் குறிப்பிட்டுள்ளார்.

இச்சோதனையில் கைத்தொலைபேசிகள், கடழ்ப்பிதழ்கள் , இதரப் பொருட்கள் மற்றும் ஆயிரத்து 20 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS