இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவையில், பெரிக்காத்தான் நெசனல் கட்சியின் உறுப்பினரும் மாசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அமாட் ஃபைசால் , ஊழியர் சேமிப்பு நிதி வாரியம் தொடர்பாக முன்வைத்த தனது விவாத கோரிக்கையைத் துணைச் சபாநாயக்கர் எலீஸ் லாவ் கியோங் தள்ளி வைத்ததால் அதிருப்தி எழுந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.
தன்னுடைய கட்சி உறுப்பினரின் விவாதக் கோரிக்கையைத் தள்ளி வைத்ததால் ஏனைய பெரிக்கத்தான் நெசனல் நாடாளுமன்ற் உறுப்பினர்களும் நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
ஊழியர் சேம நிதி வாரியம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நாட்டின் பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கங்கள் அளித்து விட்டதால் இந்த விவாத கோரிக்கைத் தள்ளி வைத்ததாக துணை சபாநாயக்கர் தெளிவு படுத்தி உள்ளார்.