சீனாவின் முன்னணி நிறுவனம், மலேசியாவைப் பிராந்திய மையமாக உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளது

தங்களின் முதலீட்டிற்கான பிராந்திய மையமாக மலேசியாவை உருவாக்கி கொள்வதற்கு சீனாவின் சில முன்னணி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

வழக்கமாக, தங்களின் வர்த்தக் பிராந்தியமாக அண்டை நாடுகளை உருவாக்கிக் கொள்ளும் சீனாவின் முன்னணி நிறுவனங்கள், முதல் முறையாக தங்களின் வர்த்தகப் பிராந்தியத்தின் மையமாக மலேசியாவை உருவாக்கிக் கொள்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளதாக, புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை, பிரதமர் துறை பணியாளர்களின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.

சீனாவின் 4 நாள் அதிகாரத்துவ வருகையை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய பிரதமர், சீன பயணம் குறித்து அரசு பணியாளர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். மொத்தம் 17 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகள் தொடர்பில் சீனாவுடன் மலேசியா கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS