தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து நீக்க திட்டம்

தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து தம்மை நீக்க திட்டம் தீட்டி வருவதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் சாடியுள்ளார்.

தன்னை நீக்கி விட்டு கெடா மாநிலத்தின் அரசாங்க செயலாளரான நூரிஸான் கஸாலியை நியமனம் செய்வதற்கு நடவடிக்கைகள் நகர்த்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். தன்னை நீக்குவதற்காக திட்டம் தீட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக தன்னிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் தேசிய நிதியமைப்பு மன்றத்தின் உறுப்பினராக ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்து சுல்தான்களால் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசாங்கத்தின் மீது தான் தொடர்ந்து எதிர்கருத்துகளை முன் வைத்து வருவதால் தம்மை நீக்க திட்டம் தீட்டி வருகின்றார்கள் என அவர் மேலும் சாடினார்.

WATCH OUR LATEST NEWS