முன்னாள் மலேசியப் பிரதமரான டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் மனு செய்த்துள்ள அரச மன்னிப்பு மனுவிற்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நஜிப் ரசாக் கோரியுள்ள அரசு மன்னிப்பு மனு குறித்து மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமயேற்றிருக்கும் எந்தவொரு நாடாளுமன்றக் கூட்டத்திலும் அது குறித்து விவாதிக்கப்படாத நிலையில், அது மனுவிற்கும் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.
நஜீப் கோரியுள்ள அரச மன்னிப்பு அம்னோ கட்சியின் தனிப்பட்ட முன்னெடுப்பு மட்டும் என்பதால் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அம்னோ கட்சி எடுத்துள்ள முடிவை அரசாங்க முடிவாக கருத்த வேண்டாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.