மாணவனிடம் மானப்பங்கம் செய்ததாக ஆசிரியர் கைது

மாணவர் ஒருவரை மானப்பங்கம் செய்ததாக ரொஹின்யா இனத்தைச் சேர்ந்த சமயப் பள்ளி ஆசிரியர் ஒருவர், இன்று கோத்தா பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.

58 வயதுடைய அபு தோயுப் உமோர் அப்பாஸ் என்ற அந்தச் சமய ஆசிரியர் கடந்த ஏப்ரல் முதல் தேதி, கிளந்தான், கடொக், கம்போங் பதேக் தாலாங்கில் உள்ள சமயப் பள்ளியில், 11 வயதுடைய ரொஹின்யா மாணவனிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தச் சமய ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS