கோவிட் 19 பெருந்தொற்று காலக்கட்டத்திற்குப் பிறகு, குடிநுழைவு துறை வெளியிட்டுள்ள 28 லட்ச கடப்பிதழ்களில் 40 சதவிகிதம் மக்கள் வெளியூர் பயணத்திற்காக பயன்படுத்தி உள்ளனர் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மயில் தெரிவித்தார். மீதம் 60 சதவிகித பயன்பாட்ட்டாளர்கள் அதனைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்ற தரவைப் பகிர்ந்துக் கொண்டார். கோவிட் காலத்திற்குப் பிறகு 4 மடங்கு கடப்பிதழ் விண்ணப்பங்கள் குடிநுழைவு துறையினருக்கு வந்தது என மேலும் அவர் தெரிவித்தார்.