நாட்டின் வளங்களை சூறையாடிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் விட்டுக்கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதி அளித்துள்ளார். லஞ்ச ஊழலிலிருந்து ஒரு தூய்மையான நாடாக மலேசியாவை உருவாக்குவதிலும், மலேசிய மக்களைப் காப்பாற்றுவதிலும் நாட்டின் வளங்களைக் கபளிகரம் புரிந்தவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் என்று பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
மாநிலங்களுக்கு சொந்தமான சொத்துக்களைக் கொள்ளையடித்து தங்களின் சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொண்ட தலைவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இயலாது. இதனால் தமக்கு வரக்கூடிய எந்த நேருக்கடியையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் உறுதி பூண்டுள்ளார்.