65 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்

எஸ்.பி.எம். தேர்வு முடித்த மாணவர்களில் 2023 கல்வியாண்டில் ஆறாம் படிவத்திற்கு செல்ல தகுதி பெற்றுள்ளவர்கள் தொடர்பான முடிவுகள் வரும் ஜுலை 3 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது. இந்நிலையில் ஆறாம் படிவத்திற்கு செல்ல நாடு தழுவிய நிலையில் 65 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாணவர்கள் அனைவரும் 643 கல்வி மையங்களில் ஆறாம் படிவத்தை தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில் 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவில் அதிருப்தியை கொண்டுள்ள மாணவர்கள், ஆறாம் படிவத்திற்கு செல்ல முடியாத நிலையில் தங்களின் தேர்வு முடிவை மறுபரி​சீலனை செய்வதற்கு ss6.moe.gov.my என்ற அகப்ப்பக்கத்தில் விண்ணபி​க்கலாம் என்று கல்வி அமைச்சு தெரி​வித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS